FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Tuesday 13 January 2015

அஞ்சல் வங்கி தொடங்க அவசர சட்டம் ?: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்




அஞ்சல் நிலையங்களை வங்கியாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் வங்கிச் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய வங்கிகள் தொடங்க உரிமம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கிராமங்களிலும் கிளைகளைக் கொண்ட அஞ்சல் துறையும் வங்கிச் சேவையில் ஈடுபட விண்ணப்பித்திருந்தது. எனினும், அஞ்சல் துறையை வங்கிப் பணியில் ஈடுபட அனுமதிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அஞ்சல் வங்கியை அனுமதிக்க அடுத்த மாதத்தில் சட்டம் கொண்டு வர அரசு பரிசீலித்து வருவதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, பிரதமர் தலைமையில் கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அஞ்சல் நிலையங்களை வங்கிகளாக மாற்றுவதற்கான மாதிரி திட்ட அறிக்கை பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


MY QUESTION IS AFTER  BANKING WE ARE FREE FROM THE TARGET OR THE SAME SITUATION WILL BE CONTINUE?........ GOD ONLY KNOWS....


No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: