FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Wednesday 17 September 2014

post published in circle aipeu blogspot

DIVISIONAL CONFERENCE OF P3 DIVISIONAL UNION, DHARMAPURI

தருமபுரி அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 14.09.2014 அன்று  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் M . ராமலிங்கம் அவர்கள் தலைமையில் தருமபுரி ஸ்ரீனிவாசா ஹாலில்  சிறப்பாக நடைபெற்றது. 

கோட்டச் செயலர் தோழர். K . அறிவழகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். முன்னணித் தோழர். G . பிரேம்குமார் அவர்கள்  வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் அஞ்சல் மூன்று முன்னாள் கோட்டச் செயலர் தோழர். R . நடராசன், அஞ்சல் நன்கு கோட்டச செயலர் தோழர். முகமது இஸ்மாயில்  உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் J . R . அவர்கள் கலந்துகொண்டு நிர்வாகிகள் தேர்தலை  நடத்தி வைத்தார். உடன் கிருஷ்ணகிரி அஞ்சல் மூன்று கோட்டச்செயலர் தோழர்.
S.செல்வம்  அவர்கள் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டார். நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தலைவர் : தோழர். C . ஏழுமலை ,SPM , அன்னசாகரம்  S .O .

கோட்டச் செயலர் : தோழர். V . பழனிமுத்து,  S .A ., தருமபுரி  HO 

நிதிச் செயலர் :  தோழர்.  M . ராஜசேகரன் ,  S .A ., தருமபுரி HO 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !. புதிய நிர்வாகிகள்  தருமபுரி கோட்டச் சங்கத்திற்கென்று புதிதாக வலைத்தளம் துவங்கியுள்ளதாக மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளித்துள்ளார்கள். வலைத்தள முகவரி : http://nfpep3dharmapuri.blogspot.in/.  இனிய துவக்கம். மீண்டும் வாழ்த்துக்கள். !

No comments:

Post a Comment

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: